Friday, August 16, 2013

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?





தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில்  சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ?

ஆர். அஹ்மத்

தொழுகை திக்ரு துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்த படி சரியாக செய்தாலே உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்பட்டு விடும் என்று குர்ஆன் கூறுகிறது.

 நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. 
அல்குர்ஆன் 13 28
இவற்றைச் செய்து நம்முடைய கவலை நீங்கவில்லை எனில் பிரச்சனை நம்மிடத்தில்தான் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்